கல்வி உதவித் தொகை - தமுமுக தலைமையகம் வேண்டுகோள்


ஏழை மாணவர்கள் பலர் கல்வி உதவித் தொகை கேட்டு தலைமையகத்தில் விண்ணப்பிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முழுமையாக உதவி செய்யும் நிதிவசதி நம்மிடம் இல்லை. எனினும் அதிலிருந்து கணிசமானோரைத் தேர்ந்தெடுத்து உதவி செய்வது என்பது தவிர்க்க முடியாதது. எனவே செல்வந்தர்கள், சமுதாய ஆர்வலர்கள், தங்களின் கல்வி உதவித்தொகைகளை தமுமுக தலைமையகம் மூலம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் தரும் கல்வி நன்கொடைகள் எங்களை நாடிவரும் ஏழை மாணவ மாணவிகள் ஏற்றம்பெறவும், அவர்களது குடும்பங்கள் முன்னேற்றம் பெறவும் வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வல்ல இறைவனிடம் அதிகமான நன்மைகளை கிடைக்கவும் உதவும் என்பதையும் நினைவூட்டுகிறோம்.
நிதி உதவி தர விரும்புவர்கள் பொருளாளர் ஓ,யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்களை 9791190542 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்